விமான பயிற்சி பள்ளிகள் முக்கிய நகரங்களில் துவக்கம்

posted in: கல்வி | 0

சேலம் : இந்தியாவில், விமானிகளுக்கான (பைலட்) தேவை அதிகரித்து வருவதால், சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில், விமான பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. வர்த்தக நோக்கில், விமான பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொலைத்தொடர்பு அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி:மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், டில்லியில் உள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகமான சஞ்சார் பவனில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.இதுதொடர்பாக சி.பி.ஐ., தகவல் தொடர்பாளர் கூறியதாவது:

இந்தியன் வங்கி நிகர லாபம் அதிகரிப்பு

மும்பை: இந்தியன் வங்கி நிகர லாபம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு கணக்கெடுப்பினை இந்தி‌யன் வங்கி வெளியிட்டுள்ளது.

ராஜசேகர ரெட்டி கொலை : குடும்ப பத்திரிகை தகவல்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, “விபத்தில் சாகவில்லை; திட்டமிட்டே கொல்லப்பட்டார்’ என அவரது குடும்ப பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா சித்தூருக்கு செப்.,2ம் தேதி அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார்.

அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளருக்கு முதல்வர் வழங்கிய ‘மெமோ’வுக்கு தடை

posted in: கோர்ட் | 0

மதுரை:மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார துறை துணை தலைவர் அருள்பிரகாசத்திற்கு முதல்வர் வழங்கிய குற்றச்சாட்டு மெமோவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.அருள்பிரகாசம் தாக்கல் செய்த ரிட் மனு: எனக்கும் கல்லூரி முதல்வர் சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது.

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மறுக்கப்பட்டால் அரசாங்கமே அதற்கு பெறுப்பு சொல்ல வேண்டும் : மங்கள சமரவீர

posted in: உலகம் | 0

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மறுக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதிக இடங்களில் காங்., வெற்றி பெறும் : மந்திரி பவார் நம்பிக்கை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சியை விட, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும்’ என,தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தையில் ரூ. 13,957 கோடி முதலீடு: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு

மும்பை: பங்குச் சந்தையில் 13 ஆயிரத்து 957 கோடி ரூபாயை முதலீடு செய்ய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதயம் இருக்கா?: கொடி நாள் நிதியிலும் சுருட்டல்; கொடுமைக்கு அளவே இல்லை

posted in: மற்றவை | 0

கோவை: கோவையிலுள்ள வட் டார போக்குவரத்து அலு வலகங்களில் விண்ணப் பதாரர்களிடம் கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. இதில், முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள் ளன. எல்.எல்.ஆர்., மற் றும் டிரைவிங் லைசென்ஸ் பெற வருவோரிடம் “கொடி நாள்’ நிதி வசூலிக்கப்படுகிறது.