சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011 முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

posted in: கல்வி | 0

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாநில பாடதிட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிவித்தார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் தரை இறங்கிய ஐக்கிய அரபு நாட்டு விமானம்

posted in: உலகம் | 0

ஐக்கிய அரபு நாட்டு விமானம் ஆயுதங்களுடன் கொல்கத்தாவில் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அபுதாபியில் இருந்து சீனாவில் உள்ள ஹன்யாங் நகருக்கு ஒரு ராணுவ விமானம் நேற்று இரவு புறப்பட்டு சென்றது.

பெண் கல்வி மேம்பாட்டுக்காக சாக்சார் பாரத் திட்டம்! –

posted in: கல்வி | 0

புதுடில்லி: பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான சாக்சார் பாரத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்பணித்தார். சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு டில்லியில் நடைபெற்ற விழாவில் சாக்சார் பாரத் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

கணக்கு இனி எளிமை தான் அரசு புது நடவடிக்கை

posted in: கல்வி | 0

புதுடில்லி:கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், சி.பி.எஸ்.இ., கல்வி முறையில், இந்த இரண்டு பாடத்திற்கும், செயல்முறை கற்றலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.பெரும்பாலான மாணவர்கள் கணக்கு பாடத்தில் தோல்வியடைவதை தவிர்க்க, பள்ளிகளில் செயல் முறைக் கற்றலை அறிமுகப்படுத்துமாறு, சி.பி.எஸ்.இ., குழு கேட்டுக் கொண்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் சூப்பர் பெர்ரி கப்பல் மூழ்கியது : 900 பேர் தப்பினர் : 60 பேர் மூழ்கினர்

posted in: உலகம் | 0

மணிலா: பிலிப்பைன்ஸ் அருகே சூப்பர் பெர்ரி- 9 என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியது . இதில் பயணித்த 968 பேரில் தொள்ளாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 60 பேர் மாயமாயினர். 10 பேர் சடலங்கள் மீட்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை 60 ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய பி.பி.சி.எப்., கோரிக்கை

தானே: ‘நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளதால், 500 மற்றும் 1,000 ரூபாய் முகமதிப்புக் கொண்ட நோட்டுக்களை ரத்து செய்ய வேண்டும்’ என, பாரதிய வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டமைப்பு (பி.பி.சி.எப்.,) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸி., மறுப்பு

posted in: உலகம் | 0

புதுடில்லி : “அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத் தில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது’ என, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சரும், துணை பிரதமருமான ஜூலியா கிலார்ட், நம்நாட்டில் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டார். நேற்று தாயகம் திரும்பும் போது, டில்லியில் நிருபர்களை சந்தித்தார்.

பெரம்பலூரில் ‘சேட்டிலைட் நகரம்’ : மத்திய அமைச்சர் ராஜா தகவல்

posted in: அரசியல் | 0

பெரம்பலூர் : “பெரம்பலூரில் 300 ஏக்கரில், 500 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வித வசதிகளுடன் சேட்டிலைட் நகரம் அமைகிறது’ என, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா கூறினார்.

மரக்காணத்தில் அனல் மின் நிலையம்: ஆய்வுப் பணிகள் மீண்டும் துவங்கின

posted in: மற்றவை | 0

திண்டிவனம்: மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில், அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் மீண்டும் துவக்கப் பட்டுள்ளது.

மும்பையில் ரூ.1.77 கோடி கிரெடிட் கார்டு மோசடி

மும்பை: மும்பையில் பிரபல வங்கியில், ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் கடைக்காரர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஹுக்கும்சிங் பிருத்விசிங் ராவ் என்பவனை மும்பை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன. மும்பை போன்ற நகரங்களில் வாடிக்கையாளர் வசதிக்காக, வங்கிகள் … Continued