பாடங்களை எழுதிய பிறகே பாட திட்டம் வரவேண்டும்

posted in: கல்வி | 0

சென்னை : சமச்சீர் கல்வி பாட திட்டம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குறிப்புதவி நூல்கள் சேகரித்தல், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் போன்ற ஆயத்த பணிகள் நடக்கின்றன.

ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன: கலைஞர்

posted in: மற்றவை | 0

பிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தலாய்லாமாவின் உதவியாளர் ஏழுவயது சிறுமி

posted in: மற்றவை | 0

ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி, தனது முற்பிறவியில் தான், தலாய்லாமாவின் உதவியாளராக இருந்ததாகக் கூறிவருகிறாள். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆசார்ய சாம்பவி (7), தனது பெற்றோர்களுடன் உத்தரபிரேதசம் வாரணாசியில் வசித்துவந்தாள். எல்லாக் குழந்தைகள் போலவே சாதாரணமாக இருந்தவள், வளர வளர திபெத் பற்றியும் அதன் விடுதலை பற்றியும், புத்த மதம் பற்றியும் … Continued

கிளிநொச்சி வெறுமையாகக் காட்சியளிக்கிறது; தமிழரின் கலாசார அடையாளங்கள் எதுவுமில்லை: ஏ-9 வீதியால் பயணித்த பத்மினி எம்.பி. கவலை

posted in: உலகம் | 0

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 பாதையூடாக நேற்றுப் பயணித்தபோது கிளிநொச்சி நகரின் வெறுமையைக் கண்டேன். அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்த்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

காஷ்மீர் பேச்சுவார்த்தை-சீனாவையும் இழுக்க முயலும் ஹுரியத்

posted in: மற்றவை | 0

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சீனாவையும் சேர்க்க வேண்டும் என அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவரான மீர்வைஸ் உமர் பாரூக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாஜ், ஒபராய்க்கு ரூ.167 கோடி இழப்பீடு

மும்பை: கடந்த ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களுக்கு தலா ரூ.167 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்தது : பார்லி.,யில் அமளி – ஒத்திவைப்பு

posted in: அரசியல் | 0

புதுடில்லி : அயோத்தியில் உள்ள பாபர்மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு கசிந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பார்லிமென்டில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து சபையை நடத்த முடியாமல போனதால் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆதிக்கத்தை இழக்கிறது அமெரிக்க டாலர், இனி அடுத்தது என்ன…

posted in: உலகம் | 0

அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.

சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

posted in: கோர்ட் | 0

கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

வெளிநாட்டினர் தத்தெடுக்கும் குழந்தைகள்: கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

மும்பை : “சர்வதேச தத்தெடுத்தல், அதாவது வெளிநாட்டிற்கு தத்தெடுத்து செல்லும் குழந்தைகள், பின்னர் கைவிடப்பட்டு இந்தியாவிற்கு திரும்பும் சூழ்நிலையில், அவர்களை பராமரிக்க தேசிய குழந்தைகள் நலநிதி ஒன்றை அமைக்க வேண்டும்’, என மும்பை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.