இந்தியாவுக்கு தங்க மழை!* மல்யுத்தத்தில் அபாரம்
புதுடில்லி: காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா “ஹாட்ரிக்’ தங்கம் வென்றது. ரவிந்தர் சிங், சஞ்சய், அனில் குமார் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
புதுடில்லி: காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா “ஹாட்ரிக்’ தங்கம் வென்றது. ரவிந்தர் சிங், சஞ்சய், அனில் குமார் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
மும்பை : வங்கிகள், கடந்த ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கி உள்ளன. இந்த கடன் வசூலாகாத நிலை ஏற்பட்டால் வரும் 2011-12-ஆம் நிதி ஆண்டில், பொதுத்துறை வங்கிகளின் வரிக்கு முந்தைய லாபம் குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன்: “இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்’ என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
போரூர்: “”தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் என்னை நம்பியோ, அரசாங்கத்தை நம்பியோ இல்லை. டாக்டர்களை நம்பித் தான் உள்ளது,” என்று, முதல்வர் கருணாநிதி பேசினார்.
சென்னை : ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் சேர அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவர்களை, கல்லூரியில் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவுக்கு வேலைக்காக போன 40 ஆயிரம் இந்தியர்கள் மாயமானதன் காரணமாக அங்கு வரும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை மலேசிய அரசு நிறுத்தி வைக்க யோசித்து வருகிறதாம்.
புதுடில்லி: ‘இந்தியாவில் 99 சதவீத கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
ஒன்பது சதவீத வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும், முதலீடுகளையும் ஏற்படுத்தியுள்ளதால், பணவீக்கத்தின் தாக்கத்தை பொதுமக்கள் சற்று பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
சென்னை : தமிழகத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்று புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
கொழும்பு : டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது.