5ம் தேதி துவங்குவதாக இருந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் : கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு உத்தரவு
நாமக்கல் : ” பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்தினால் நாடு முழுவதும் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என, மத்திய அரசு உறுதியளித்துள்ளதால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) சார்பில், வரும் 5ம் தேதி முதல் நடக்க இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.