ஆசிரியர்களின் பணிக்கால விவரம் ‘இன்டர்நெட்’டில் வெளியிட ஏற்பாடு

posted in: கல்வி | 0

திண்டுக்கல்:ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பணிக்காலம் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான, மூப்பு (சீனியாரிட்டி பேனல்) பட்டியல் மாநில அளவில் தயாரிக்கப் படுகிறது.

நீலகிரியில் ரூ.40 கோடி மதிப்பில் மென்பொருள் ஆய்வு மையம்

posted in: அரசியல் | 0

ஊட்டி:”இந்தியாவில் முதல் முறையாக ஊட்டி அல்லது குன்னூரில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மென் பொருள் ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்,” என மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

மாஸ்கோ ரயிலில் குண்டுவெடிப்பு ; 40 பேர் பலி ; 20 பேர் காயம்; பயங்கரவாதிகள் கைவரிசை

posted in: உலகம் | 0

மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் சென்ட்ரல் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி

posted in: மற்றவை | 0

கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

பகுதி நேர பி.இ.​ படிப்பில் சேருவதற்கு ஏப்ரல் 5 முதல் விண்ணப்பம் விநியோகம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ மார்ச் ​ 26:​ பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.​ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5}ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.

இந்திய மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

லண்டன்,​​ மார்ச் 26:​ இந்திய மாணவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., ரகசிய கூட்டு?கருணாநிதி திடீர் சந்தேகம்

posted in: அரசியல் | 0

சென்னை:’அ.தி.மு.க.,வையும் கூட்டு சேர்த்து, பென்னாகரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு, அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது’ என, முதல்வர் கருணாநிதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தனியார் தொழிற்சாலைகள் பங்கேற்பு

posted in: மற்றவை | 0

திண்டுக்கல்:தமிழகத்தில் முதன் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் உடையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கும் முகாம் நடந்தது.மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறன் உடையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழங்குவதற்கான முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ரேஷன் கடை பணியாளர்கள் தேர்வு

posted in: மற்றவை | 0

திண்டுக்கல்:ரேஷன் கடைகளுக்கு தேவையான எடையாளர், விற்பனையாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பொதுவிநியோக திட்டத்தில் எந்த வித குறைபாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.