நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஆராய 5 பேர் குழு : தெலுங்கானா விவகாரத்தில் அரசு அறிவிப்பு!
புதுடில்லி : தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து ஆய்வு செய்யவும், ஆந்திராவில் உள்ள அனைத்துப் பிரிவு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தவும், ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதன் மூலம், தெலுங்கானா போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.