நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஆராய 5 பேர் குழு : தெலுங்கானா விவகாரத்தில் அரசு அறிவிப்பு!

posted in: அரசியல் | 0

புதுடில்லி : தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து ஆய்வு செய்யவும், ஆந்திராவில் உள்ள அனைத்துப் பிரிவு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தவும், ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதன் மூலம், தெலுங்கானா போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் ஆராய்ச்சியாளர்கள் வருகை எப்போது? : சேது சமுத்திர திட்டத்தில் அடுத்த பிரச்னை

posted in: மற்றவை | 0

ராமநாதபுரம் : சேது சமுத்திர திட்டம் மீண்டும் துவங்கவுள்ள நிலையில், அதற்கான ஆய்வுப் பணிகளுக்கான ஆராய்ச்சியாளர்கள் குழு வருகை குறித்த விவரம் தெரிவிக்கப்படாமல் உள்ளது.

கூடன்குளம் அணுமின் நிலையம்: 40 சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு

posted in: மற்றவை | 0

வள்ளியூர்: கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு சர்வதேச அணுசக்தி உற்பத்தியாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த 40 விஞ்ஞானிகள் ஆய்வுக்காக இன்று வந்துள்ளனர்.

லண்டன் நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையிழப்பு

லண்டன் : கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

posted in: கல்வி | 0

தமிழகம் முழுவதிலும் செயல்படும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளை கண்டறிந்து, அப்பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் எங்கே? கேரளாவிடம் கேள்வி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தினால், அது அணையை பாதிக்குமா? அணையின் நீர்மட்டம் 155 அடியை எட்டினால், அணை உடையும் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேரள அரசு சமர்ப்பிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை : பரேக் அறிக்கையை அரசு ஏற்குமா

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் அதிகரிக்கலாம்’ என, கிரித் பரேக் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்ஷேயை கொல்ல சதி என 37 பேர் கைது : இலங்கையில் அரசியல் விரோதம் தீவிரம்

posted in: உலகம் | 0

கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

posted in: உலகம் | 0

பெய்ஜிங்,​​ பிப்.​ 2:​ திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது.​ அவ்வாறு சந்தித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவு கடுமையாகப் பாதிக்கும் என்று சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜு வெய்கூன் எச்சரித்தார்.

ஒரு ஆசிரியர்; 102 மாணவர்கள் : எப்படி முன்னேறும் விழுப்புரம்

posted in: மற்றவை | 0

தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சாத்தனூர் தொடக்கப் பள்ளியில் 102 மாணவர்களுக்கு ஓராண்டாக, ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.