நோபல் பரிசை பெற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா
ஆஸ்லோ : அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நேற்று வழங்கப்பட்டது. வன்முறை இல்லாத போராட்டத்துக்கு வழிவகுத்த மகாத்மா காந்தி, உலக அமைதிக்கான முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக ஒபாமா தன்னுடைய உரையில் புகழாரம் சூட்டினார்.